நம் இந்தியாவின் வளர்ச்சிக்குத் தொழில்நுட்பத் துறையின் பங்கு மகத்தானது. 1980, 90 களில் தொழில்நுட்ப சேவைகள் (IT Services) தொழில்களில் முதலீடு செய்து நன்கு வளர்ந்து உள்ளோம். இந்தத் தொழில்நுட்ப அலையில் பயணித்தவர்களின் வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது என்பது நிதர்சன உண்மை.
என்ன, நாம் அமெரிக்கா உருவாக்கும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சேவைகள் செய்து ஏற்றுமதி செய்து வந்தோம். கடந்த 30-40 வருடங்களாக, நாம் அமெரிக்கா போன்ற நாடுகளைப் பின் தொடர்ந்தோம். அவர்கள் செய்யச் சொல்வார்கள், நாம் செய்வோம். அவர்கள் ஒரு நிறுவனத்தை உருவாக்கினால், அதே போன்று ஒரு நிறுவனத்தை நாமும்’ உருவாக்கி, அவர்கள் விற்கும் விலையைவிடக் குறைந்த விலையில், நம் மென்பொருளை விற்போம்.
இந்தச் செயற்கை நுண்ணறிவு (செ.நு) காலத்தில் நம் இந்தியாவின் மக்கள் தொகையும், அறிவுத்திறனும், திரட்டும் தரவுகளும் நமக்கு ஒரு பெரும் பலம் . நம்மைச் சற்றி பிரச்சனைகள் இருந்தாலும், இதை ஒரு நல் வாய்ப்பாகத் தான் கருத வேண்டும். நாம் இனி பின்தொடரத் தேவை இல்லை. ஆராய்ச்சிகள் செய்து, கண்டு பிடிப்புகளையும், தொழில் நுட்பத்தையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் காலம் இது. செ.நு அலையைப் பயன்படுத்தி நாம் வளர, இது ஒரு வசந்த காலம்.
கடந்த 8 வாரங்களாகச் செயற்கை நுண்ணறிவைப் பற்றி எழுதி வருகிறேன். இந்த வாரத்தோடு முற்றும். அடுத்த வாரம் சந்திப்போம்.
நன்றி…