உழைப்பாளி
உழைப்பாளி

உழைப்பாளி

ஒவ்வொரு வருடமும் மே. 1 ஆம் தேதி உழைப்பாளர்கள் தினம் கொண்டாடுகிறோம். நாம் அனைவரும் ஒரு உழைப்பாளி தான். சிலர் அதிகம் உழைக்கின்றனர். சிலர் உழைப்பை விதைப்பதில்லை. நாம் செய்யும் வேலையை எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அது நம் வளர்ச்சிக்கு ஒரு தடைதான். வளரும் செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ப நம் உழைப்பும், அணுகுமுறையும் மாற வேண்டும்.

நாம் எவ்வளவு வாசிக்கிறோமோ, அதற்கு ஏற்றார் போல்–நான் நம் சிந்தனைத் திறனும் வளரும். அதுபோல், நாம் எவ்வளவு செ.நு வைப் பயன்படுத்துகிறோமோ அதற்கு ஏற்றார் போல் நான் நம் வளர்ச்சியும் இருக்கும். காலத்திற்கு ஏற்றார் போல் நம் உழைப்பும், செய்யும் வேலையும் மாற வேண்டும்.

உதாரணமாக 1700 களில், கைகளைப் பயன்படுத்தி உடைகளைத் தயாரித்தனர். 1800களிலும் இது தொடர்ந்தாலும் மெல்ல மெல்ல நூற்பாலைகளில் துணிமணிகள் தயாரிக்கப்பட்டன. உடைகள் தயாரிப்பை, கைத்தொழிலாகச் செய்தோர், வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். அதுபோல், 12, 15 மணி நேரம், ஓட்டுனர்கள், கார், பஸ் ஓட்டும் வேலை காலப்போக்கில் இருக்கப் போவதில்லை. செ.நு தொழில் நுட்பத்திற்கு அது மாறிவிடும்.

காலத்திற்கு ஏற்ப உழைப்பு’ என்ற விதையை நாம் மாற்றி, மாற்றி விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும்

விதைப்போம், உழைப்போம்…

தெடரும்

நன்றி…

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags:
Share
Download Download
Top