செயற்கை நுண்ணறிவு (செ.நு) பற்றி முஸ்தபா சுலைமான் எழுதிய ‘வரும் அலைகள்’ (The Coming Wave) என்ற புத்தகம் வாசித்தேன். சிலர், இது அலை அல்ல சுனாமி என்றும் கூறுவர்.
முன்பிருந்த அலைகள் போலவே, செ.நு அலையிலும் வேலை இழப்புகளும், வாய்ப்புகளும் பன்மடங்கு இருக்கும். வரும் அலைகளை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. அலைக்குத் தகுந்தபடி நாம் தான் மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும்.
தொழில்நுட்பத் துறையில், மிக நன்றாகக் குறியீட்டாக்கம் (Coding) செய்யும் ஒருவர் செய்யும் வேலை, பத்து பேர் செய்யும் வேலைக்குச் சமம். அதுபோல் தான் செ.நுவும். பத்து பேர், அல்லது அதற்கு மேலும் ஆட்கள் தேவைப்படும் இடத்தில், செ. நுவைப் பயன்படுத்தி, நாம் ஒரு ஆளைக் கொண்டு வேலையை முடித்து விடலாம். குறியீட்டாக்கம் (coding) வேலையும் எளிதாகி விடுகிறது.
இன்று தொழில் நுட்பத் துறைகளில் 10 பேர் வேலை செய்யும் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 100 கோடி, அல்லது நூறு பேர் வேலை செய்யும் நிறுவனத்தின் வருமானம் 1000 கோடி என்று பல உதாரணங்கள் இருக்கின்றன. அனைத்து நிறுவனங்களும் இதுபோல் இல்லை என்பதும் உண்மை.
வந்து கொண்டிருக்கும் செ.நு அலைகளைக் கண்டு நம் வேலை என்ன ஆகும்? தொழில் என்ன ஆகும் என்று பயப்படாமல், இந்த அலைகளில் நன்கு நீந்தக் கற்றுக் கொள்வோம்.
தெடரும்
நன்றி…