ஒரு குழந்தை பிறந்தவுடன் நாம் எப்படி பாலூட்டி, நடை பழகி, பேச்சு பழகி, கல்வி கற்றுத் தந்து, ஒரு பிள்ளையாக உருவாக்கி, பிள்ளைகள் செய்யும் தவறைத் திருந்தி, நம் பிள்ளைகளைச் சுயமாகச் சிந்தித்து செயல்பட ஊக்குவிப்போமோ… அதுபோல் தான் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமும்.
செ.நு வும் ஆரம்பத்தில் ஒரு குழந்தைபோலத் தான். அதற்கு நாம் தரவுகள் (Data) ஊட்டிப் பழக்க வேண்டும். பழக்க, பழக்கத் தொழில் நுட்பம் தவறுகள் செய்தால், அந்தத் தவறுகளைத் திருத்தி, நம் பிள்ளைகளைப் பழக்குவது போல், செ.நுவைப் பழக்க வேண்டும். பழகிப் பழகிச் செ.நு வும் நல்முறையில் சிந்திக்க ஆரம்பித்துவிடும்.
மனிதர்கள் செய்யும் தவறை, நாம் சுட்டிக்காட்டும்போது கோபம் வரும். ஆனால் செ.நு வைப் பொறுத்த வரையில், அது இயந்திரம் என்பதால் கோபம் எல்லாம் வராது. சில சமயம், மனிதர்களை எவ்வளவு பழக்கினாலும் அவரவர் செய்வதைத் தான் செய்வர். ஆனால் செ.நு வைப் பொறுத்தவரையில், எல்லளவு சிறப்பாகப் பழக்குகிறோமோ, அவ்வளவு சிறப்பாக வேலை செய்யும்.
மனிதர்களுக்கு அன்பு, பாசம், பசி, கோபம் போன்ற உணர்வுகள் உண்டு. ஆனால் செ.நு வுக்கு இதுபோல் எதுவும் கிடையாது. எதிர்காலத்தில் இருக்குமா என்பது இன்னும் ஊகிக்க முடியாத கேள்வியே.
தெடரும்…
நன்றி.