அறிந்து கொள்வோம்
அறிந்து கொள்வோம்

அறிந்து கொள்வோம்

செயற்கை நுண்ணறிவு (செ.நு) என்றால் என்ன? மனிதனைப் போல் அறிவு உள்ள ஒரு இயந்திரம். சில/பல செயல்களில் மனிதனை விட அறிவு மிக்க,ஒரு தொழில்நுட்பம். நம்மை அறிந்தும், அறியாமலும், நாம் அன்றாடம் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தைப் ‘பயன்படுத்தி வருகிறோம். இது ஒன்றும் புதிதல்ல.

செ.நு என்ற தொழில்நுட்பத்திற்கான புள்ளையார் சுழி 1950 களில் போடப்பட்டது என்று சொல்லலாம். 1950ல் ஆலன் டூரிங் என்பவர் கணிப்பொறி நுண்ணறிவு குறித்து ஒரு ஆராய்ச்சி கட்டுரை (Computing Machinery & Intelligence) எழுதினார். அதில் ஒரு இயந்திரம் மனிதனைப் போல் நடந்து கொள்கிறதா? என்பதை சோதிக்கும் முறையைப் பற்றி எழுதி இருந்தார். இதுவே டூரிங் டெஸ்ட்.

1956ல் ஜான் மெக்கார்த்தி என்பவர் செ.நு (Artificial Intelligence) என்ற வார்த்தையை உருவாக்கினார். இயந்திரங்களால் மனிதனைப் போல் எப்படி சிந்திக்க முடியும் என்ற ஆராய்ச்சிகளை அவர் மேற்கொண்டார்.

இவ்வாறு பெயர் சூட்டப்பட்ட செ.நு பற்றி.

கடந்த இரண்டு வருடங்களாக (சாட் ஜு.பி.டி அறிமுகப் படுத்தப் பட்ட பிண்னர்-30/11/2022) பண்மடங்கு அதிக விழிப்புணர்வு வந்துள்ளது. இது எப்படி வேலை செய்கிறது? இதைப் பயன்படுத்தி நாம் எப்படி வளரலாம்?

தெடரும்

நன்றி…

கார்த்திக் சிதம்பரம்

Category:
Tags:
Share
Download Download
Top