செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நாம் அனைவரும், நாம் செய்யும் செயல்களை மேம்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக நான் மின்னஞ்சல் அனுப்பும்போது அதில் உள்ள எழுத்து இலக்கணப் பிழைகளைக் கண்டறிய சாட் ஜி.பி.டி பயன்படுத்த ஆரம்பித்தேன்.
வாரம் வாரம் எழுதுவதால், எழுதியதை சரிபார்த்து, என் எழுத்துநடை மாறாமல் சிறு சிறு மாற்றங்கள் செய் (Keep the same tone) என்று செ.நுவுக்கு உத்தரவு (Prompt) இடுவேன். செ.நுவும் என் எழுத்து நடையை மேம்படுத்தும். சாட் ஜி.பி.டி கொடுத்ததை அப்படியே பயன்படுத்தாமல், இன்னொரு முறை வாசித்து என் தேவைக்கு ஏற்றவாறு மேலும் மாற்றங்கள் செய்து பயன்படுத்துவேன்.
ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் மொழிபெயர்க்க முன்பெல்லாம் அதிக நேரம் ஆகும். ஆனால் இப்போது செ.நு, அழகாக மொழிபெயர்த்துத் தந்துவிடுகிறது. வேலை நேரம் அதிகம் குறைகிறது. முன்பெல்லாம் தேடுவது கூகுளில் இருக்கும். தற்போது கூகுளில் தேடினாலும், நமக்கு என்ன தேவை என்பதை சாட் ஜி.பி.டியிடம் கூறி, அது தேடுதல் வேலையைச் செய்து நமக்கு விடையைத் தந்துவிடுகிறது.
இன்று நாம் செய்யும் வேலை மேம்படச் செ.நு நன்கு பயன்படுகிறது.
தெடரும்
நன்றி…